×

ரஷ்யாவின் கொடூர தாக்குதல்!: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் மட்டும் 900 மனித உடல்கள் கண்டுபிடிப்பு..!!

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியுள்ள நிலையில் அங்கிருந்து 900 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது. கீவின் புறநகர் பகுதிகளை தன்வசப்படுத்தி வந்த ரஷ்யா, உக்ரைன் படைகளின் பதில் தாக்குதல் காரணமாக அங்கிருந்து வெளியேறிவிட்டது. இதையடுத்து அப்பகுதியில் உக்ரைன் ராணுவமும், காவல்துறையும் தீவிரமாக ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் தலைநகர் கீவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாகாண காவல்படை தலைவர் நெபிடோவ், கீவில் மட்டும் இதுவரை 900 உடல்கள் மீட்பட்டிருப்பதாக கூறினார். நெபிடோவ் பேசியதாவது, கீவில் மட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ள உடல்களின் எண்ணிக்கை 900த்தை கடந்து இருக்கிறது. இவர்கள் அனைவரும் ஒன்றுமறியா அப்பாவி மக்கள். அவர்களது உடல்கள் அனைத்தும் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ரஷ்ய படையினர் சற்றும் இரக்கமின்றி 900 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர் என வேதனை தெரிவித்தார். உச்சா நகரில் ஏற்கனவே 500 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது கீவிலும் 900 உடல்கள் கண்டறியப்பட்டிருப்பது உக்ரைனில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தலைநகர் கீவில் ஏராளமானோரை காணவில்லை என்று தொடர்ந்து புகார்கள் வருவதால் அவர்கள் அனைவரும் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை அச்சம் தெரிவித்துள்ளது. இதனிடையே 50 நாட்களுக்கு மேல் தாக்குதல்களை தொடர்ந்து வரும் ரஷ்யாவுக்கு எதிராக மேலும் கடுமையான தடைகளை விதிக்க வேண்டும் என உலக நாடுகளை உக்ரைன் அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார். …

The post ரஷ்யாவின் கொடூர தாக்குதல்!: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் மட்டும் 900 மனித உடல்கள் கண்டுபிடிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Russia ,Ukraine ,Kiev ,Dinakaran ,
× RELATED உக்ரைன் மீது தாக்குதலை...